செவிபேசி இன்றியே,
சிணுங்கலும் முனுங்கலும்,
சிலநேரம் மௌனமும்,
சிதறாமல் செவியோடு சேராதோ?
தினம்பார்க்க தேவையில்லை,
தொலைதூர மென்றாலென்ன,
தொலைத்துவிட மனம்வருமா?
தொடுவானமது தொடும் வானமானபின்பு!
செவிபேசி இன்றியே,
சிணுங்கலும் முனுங்கலும்,
சிலநேரம் மௌனமும்,
சிதறாமல் செவியோடு சேராதோ?
தினம்பார்க்க தேவையில்லை,
தொலைதூர மென்றாலென்ன,
தொலைத்துவிட மனம்வருமா?
தொடுவானமது தொடும் வானமானபின்பு!
வழக்கங்களை
வசைபாடி குதர்க்கங்கள் பேசிநிற்க,
தலைக்கனம்
தலைக்குமேல் வெள்ளமாய் மூழ்கடிக்க,
புரையேறி
புரைஅடைத்து இளமை மூச்சடைக்க,
முதுமைமட்டும்
முதிர்வுடன் கடிகாரம் பார்த்திருக்கும்!
மலைபோலல்ல மணல் குவியலாய் கொஞ்சமுண்டு ,
பொருட்செல்வம் உண்டு!
பெரிதாய் வணிகத்தில் வந்ததல்ல,
மழையும் புயலும் வெயிலும் தாண்டி,
மலை வாழைப் பொதியை குதிரையேற்றி ,
மேடும் பள்ளமும் வெள்ளமும் தாண்டி,
வணிகம் செய்து சிறுகச் சேர்த்தது !
மண்ணுக்கு நீரோடு வியர்வை பாட்சி,
பயிர் வளர்த்து சேர்த்த கொஞ்சம் உண்டு !
தன்னலம் பெரிதாய் பார்த்ததில்லை ,
தலைகனம் கொஞ்சமிருந்தால் தவறுமில்லை
குணம் தாராளமாய் வாய்த்ததனால் !
செம்மையை சொல்ல வார்த்தையில்லை ,
அவர் பண்பினை வாழ்த்த வயதுமில்லை !
நன்றாய் பயின்று பட்டம் பெரும் வயது,
அதில் குடும்பப் பொறுப்பு மொத்தமும் சுமந்து,
பிள்ளையாய் உடன்பிறந்த பேரை வளர்த்து,
பெரியதாய் ஆளாக்கி கடமைகள் செய்தவர் !
மலைபோல் மனிதமும்,
மாந்தரிடை செல்வாக்கும் ,
சுனைபோல் வள்ளலும் ,
எளிமையின் உருவும் ,
அணையென நன்னெறியும்,
உருவெனத் திகழும் ஒருவர் !
கணவுகள் சொன்ன கதைகள் எல்லாம் ,
கண்களில் தென்பட்ட நாட்கள் எங்கே! – தெரியாமல்,
கடுஞ்சொல் அம்புகள் ஏவியதால்,
கண்ணீர் மட்டும் மிஞ்சியது இங்கே!
சொல்ல வந்த வார்த்தைகள் எல்லாம்,
சொல்லாமல் புரிந்த நாட்கள் எங்கே! – புரியாமல் ,
சொல்லி முடித்த வார்த்தைகளால்,
சோகம் மட்டும் நீள்கிறது இங்கே!
இதழ்கள் பேசிய சொற்கள் எல்லாம் ,
இதயம் சேமித்த நாட்கள் எங்கே! – அறியாமல்,
இளைத்து விட்ட தவறுகளால்,
இடிந்து போன இதயம் இங்கே!
உரசிப் போன நொடிகள் எல்லாம்,
உறைந்து நின்ற நாட்கள் எங்கே! – வேகத்தால்,
உடைந்து விட்ட உறவதனால்,
உருக்குகின்ற வலி தான் இங்கே!
குருதி சிந்தி பெற்ற சுதந்திரம் கொண்டு பிறர்
குருதியை உறிஞ்சும் கொடுமை ஏனோ?
பெண்ணை பேணிகாக்கும் எண்ணம்கொண்ட சுதந்திர நாட்டில்
அவள் பாதுகாப்புக்கு பாதகம் தான் ஏனோ?
ஒற்றுமையாய் இணைந்துவென்ற ஒற்றைலட்சியமம் சுதந்திரத்தை
கூறிட்டு கொலைசெய்யும் கொடூரம்தான் ஏனோ?
முப்புறமும் கடற்கரையும் மறுபுறத்தில் இமயமும் சூழ்ந்தவளே
ஆழ்பவரும் செழித்து வாழ்பவரும் கறைபடுத்தும் இமாலயஊழல்கள் ஏனோ ?
அன்பிற்கும் பண்பிற்கும் பிழையல்ல பண்பாட்டிற்கும் பெயர்போனவளே
உன்பிள்ளைகள் பங்காளித்தகராற்றில் நிலதிகும்-நீருக்கும் அடித்துகொள்ளும் அவலம் ஏனோ?
தவமிருந்து பெற்றபிள்ளை சுதந்திரம் அதை குறைமாதத்தில் பிரசவித்தாயோ?
தாயே, இல்லைக் குறைகளுடன் பிரசவிதாயோ?
என் உயிர்நீர் வற்றிடலாம்,
பெருங் கடல்நீர் வற்றிடலாம்,
என் கண்கள் இருண்டிடலாம்,
சுடும் கதிரவன் இருண்டிடலாம்,
என் சுவாசம் நின்றிடலாம்,
வீசும் காற்றும் நின்றிடலாம்,
என் நாடி அடங்கிடலாம்,
சுழலும் பூமி அடங்கிடலாம்,
என் உடலும் சாய்ந்திடலாம்,
உயர் வானமும் சாய்ந்திடலாம்,
என் தோற்றங்கள் மாறிடலாம்,
பெற்றதாய் பாசம்தான் மாறிடுமோ!
உயரப் பறக்க ஆசைப் படு,
பருந்தை போல அல்ல,
விண்மீனைப் போல!
விரைந்து ஓட ஆசைப் படு,
சிறுத்தைப் போல அல்ல,
புயலைப் போல!
நீண்டு வாழ ஆசைப் படு,
ஆமையைப் போல அல்ல,
பிரபஞ்சத்தைப் போல!
பேரொளி வீசிட ஆசைப் படு,
தங்கத்தைப் போல அல்ல,
கதிரவனைப் போல!
திடமாய்த் திகழ ஆசைப் படு,
யானையைப் போல அல்ல,
இமயத்தைப் போல!
பிறர்கனவுகளின் கதாநாயகனாய்
நாயகியாய் வலம்வரும்
நாள்வரும், காத்திரு!
தூற்றுவோர் தூற்றட்டும்
பேராசை யென்று!
காலம் கைகூடும்,
கனவுகளுக்கு பயப்படாதே !!!
என் இதயத்தை போர்கலமக்கி!!!
பார்வையை அம்புகலக்கி
போர்தொடுக்கிறாள் என்மீது,
புன்னகையை அணுகுண்டாகி
வீசிஎரிகிறாள் என்மீது,
இருந்தும் வலிக்கவில்லை என்னிதயதிற்கு
அவளிடம் வீழ்வது தவப்பலனானதால்!!!!
காற்றில்லா இடத்திலும் சுவாசம் செய்வான்,
என் மனதில் வாசம் செய்பவன் –
அது என் இதயமாக இருக்கும் பட்சத்தில்!
கற்பனை மறைந்ததடி , என் கற்பனை மறைந்ததடி !
உன் மையிட்ட விழிகளை எழுதிய பேனாவில் கற்பனை மையும் மறைந்ததடி!
வார்த்தைகள் தீர்ந்ததடி , என் வார்த்தைகள் தீர்ந்ததடி!
உன் செவிதழின் அழகை கணிசுலையாய் சொன்ன வாயிலே வார்த்தைகள் தீர்ந்தடடி!
கனவுகள் முடிந்ததடி, என் கனவுகள் முடிந்ததடி!
உன் உருவத்தை கற்சிலையாய் வடிக்கவிருந்த இதயத்தின் கனவுகள் முடிந்ததடி!
பாலையாய் போனதடி, நீயின்றி பாலையாய் போனதடி!
சோலையாய் பூத்த இதயம் வறண்ட பாலையாய் போனதடி!
காரிருள் சூழ்நததடி, நீயின்றி காரிருள் சூழ்நததடி!
முழுமதியை சுற்றிவந்த உன் முகம் மறைந்த காரனத்தால் காரிருள் சூழ்நததடி!
வரட்சியில் காய்ந்ததடி, நீயின்றி வரட்சியில் காய்ந்தடடி!
மலர்போல அலர்ந்த மனம் நீருற்ற நீயின்றி வரட்சியில் காய்ந்ததடி!
இலவச அரிசி போடுவதாய்ச் சொன்னிர்கள்,
ஆம் இலவச அரிசி போடத் தான் செய்தீர்கள்,
வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் சேர்த்து!
சிந்த யோசிக்கும் அவள் குறு நகையும்,
சிறிதே விலகிய அவள் கண் மையும்,
காற்றில் கலைந்த அவள் கருங் கூந்தலும்,
தயக்கம் கலந்த அவள் ஓரப் பார்வையும்,
மலரமறுக்கும் மொட்டாய் அவள் செவ் விதழ்களும்,
நாள்பட்டும் பெயரமருக்கும் அவள் நாகப் பூச்சும்,
அவளை பிரிய மறுக்கையில், நான் மட்டும் விதிவிளக்கா!!!
அவன் கண்ணீருக்கு காரணமான
அவள் கண்களை நியாயப்படுத்த
என் கவிதைக்கு கட்டளை!
கடினம் தான் என்றாலும்
கற்பனைத் தீட்டித் தான் பார்போமே!
கணம்தான் !
அவள் தலையிளல்ல, இதயத்தில் !
கல்தான் !
அவள் இதயத்திளல்ல , தலையில் !
இரு பத்துத் திங்களாய்
இதயத்தில் தாங்கியதாய்ச் சொன்னாயே,
இருபது வருடங்களுடன்
ஈரைந்து மதம் சுமந்தவர்கள் முன்னே
ஈடு கொடுக்குமா உந்தன் காதல் !
எட்டுத் திக்கும்
சுற்றியதை சொன்னாயே,
அவள் பெற்றோர் கண்டு
சுற்றம் சிரிக்க சதிசெய்த உனக்கு
அவள் செய்தது சதியாகுமா?
புரிதலின் உச்சமே காதலென்பீற்கள்,
அவள் நிலையை,
அவலநிலையை
புரிந்தும் தூற்றுவதேனோ ?
நீ தொடங்கியதை அவள் முடித்தால்,
அதற்குப் பெயர் துரோகமென்கிறாய்!
பெற்று வளர்த்தவர்களின் உறவு,
இறைவன் தொடங்கியதை நீ முடித்திருந்தால்,
அதருக்கு பெயர் என்னவென்பது?
குற்றம்தான் அவள்செய்தது ,
குணவதியாய் வாழ்தவலை,
குலைந்து வலிந்து காதல்செய்வதாய்
கொக்கிபோட்டதால் சிக்கிய
தூண்டில் மீனானதால்!
படைப்பிலே புதுமை வேண்டின்,
புரிதலின் தோரணையிலும் புதுமை வேண்டும்!
உழைப்பிலே உயர்வு வேண்டின்,
உறுதியை உன்மனம் சுமந்திட வேண்டும்!
நிலைத்திடும் வெற்றி வேண்டின்,
நினைவிலே துணிவும் தெளிவும் வேண்டும்!
அறியாத உறவுகளுக்கு உவமைகள்
கிடைத்தன எளிதாக,
இணையற்ற என் நட்பிற்கு எளிதில்
கிடைக்கவில்லை எதுவும்,
அதற்கு ஈடு இணை
ஏதுமில்லா காரணத்தால்!